
🔊To listen to this news in Tamil, Please select the text.
டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜஃபார், நாடாளுமன்ற மேலவையின் புதிய தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.
செனட் சபையான மேலவையின் முழு அமர்வின் முன் வான் ஜுனைடி பதவி ஏற்ற நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் கலந்து கொண்டார்.
பதவேற்றபின் உரையாற்றிய வான் ஜுனைடி, இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற சீரமைப்பிற்காக முடிந்தவரை செயலாற்ற இருப்பதாகவும் சொன்னார்.
பூலாய் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் பிரதிநிதியும் அம்னோவைச் சேர்ந்தவருமான நூர் ஜஸ்லான் முகமட், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு நூர் ஜஸ்லானை எதிர்த்து போட்டியிட்ட பெர்சத்து செனட்டர் ரஸாலி இட்ரிஸ், 43-க்கு 11 என்னும் வாக்கு வேறுபாட்டில் தோற்றார்.
