
🔊To listen to this news in Tamil, Please select the text.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமைத்துவத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறேன் என்று தேசியக் கூட்டணி சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கலாம் என எண்ணி இருந்தேன். ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கான பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் பல நடவடிக்கைகளை நானும் மேற்கொண்டு வருகிறேன்.
அதேவேளை, இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்தும் முடிவு எடுக்கவில்லை. ஆனால், போட்டியிடும்படி தேசிய கூட்டணி தலைமைத்துவம் அதை ஏற்கவும் தயாராக உள்ளேன் என்றும் அஸ்மின் அலி கூறினார்.
