
🔊To listen to this news in Tamil, Please select the text.
இணைய சேவையின் வாயிலாக அந்நிய நாணயங்களை மாற்றும் நடவடிக்கையில் மோசடி புரிந்த சந்தேகத்தின் அடிப்படையில் 77 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல் துறை பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட தலைமையகத்தின் வர்த்தகக் குற்ற புலனாய்வுப் பிரிவு மற்றும் உளவு நடவடிக்கைப் பிரிவு மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 17 முதல் 37 வயதுக்கு உட்பட்ட 43 ஆண்களும் 34 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையின்போது, 35 கணிணிகள், 29 மடிக்கணினிகள், ஒரு கையடக்க கணினி மற்றும் 38 தொழிலாளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஷாம் அப்துல் சுக்கோர் கூறினார்.
