
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டின் கடன் 1.5 டிரில்லியனாகவும் (ஒன்றரை லட்சம் கோடி ரிங்கிட்) மொத்த உற்பத்தியில் அது 80 விழுக்காடாகவும் இருப்பதால், அது நாட்டை திவாலாக்கும் என்ற அச்சத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனவே, இந்தக் கடன் தொகை மேலும் அதிகரிக்காமல் இருக்க பெரிய பெரிய திட்டங்களை மேற்கொள்ளாமலும் அதற்காக கடன் வாங்காமலும் இருக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
1970களில் துன் ரசாக் காலத்தில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்ற பெல்டா, மாரா, ரிஸ்டா போன்ற அமைப்புகளை உருவாக்க கடன் வாங்கப்பட்டு அது இன்னமும் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மெகா திட்டங்களை சிறிது காலத்திற்கு செயல்படுத்தாமல் இருப்பதே நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.



