
🔊To listen to this news in Tamil, Please select the text.
கெடா மந்திரி பெசார் சனூசி நோர்மீது இன்று செவ்வாய்க்கிழமை செலாயாங் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட இருக்கிறது.
அமிருடின் ஷாரியை சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமித்ததன் தொடர்பில் சிலாங்கூர் ஆட்சியாளருக்கு அவமதிப்பு ஏற்படுத்தினார் என்பதன் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக நீதிமன்ற இணையதள தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், சனூசி நோர் மன்னிப்பு கேட்டாலும் இந்த விவகாரம் இன்னும் முடியவில்லை என்று சிலாங்கூர் அரண்மனை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
