
இம்மாதத்தில் அம்னோ தனது தேர்தலை நடத்த முடிவு செய்தது.ஆனால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்று தாக்கத்தினால் தேசிய பாதுகாப்பு மன்றம் இதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தகவல்கள் கூறப்படுகின்றன.
அம்னோ தனது தேர்தலை நடத்தி புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறது. ஆனால் இதற்கு தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல் இப்போது கிடைத்திருக்கிறது.
அம்னோ தனது தேர்தலை நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்ததாக கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜுதீன் தெரிவித்தார்.
ஆனால் இப்போது அரசாங்கம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த தேர்தலை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
