
🔊To listen to this news in Tamil, Please select the text.
24 செப்டம்பர், காலை 10 மணிக்கு Hang Tua மண்டபத்தில் மலாக்கா தமிழ் பள்ளிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மிக சிறப்பாக நடைபெற்றது கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள் இதில் பேச்சாளர்களாக பேராசிரியர் டாக்டர் காதர் இப்ராஹிம் மற்றும் போலீஸ் அதிகாரி மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என முக்கிய பிரமுகர்களும் கலந்து மாணவர்களுக்கு தேவையான நிறைவான விஷயங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக Persatuan Kebajikan Dan Reakarasi Melaka (justice for Malaysia) என்று சுருக்கமாக இவர்களை அழைப்பார்கள். பல நன்மைகளை செய்து வரக்கூடிய இவர்கள் முதல்முறையாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை ஏற்பாடு செய்தார்கள்…
இக்கருத்தரங்கில் கவிமாறன் அவர்கள்

சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலக்கை நோக்கி என்ற பெயரில் பேசினார். அதுபோல பேராசிரியர் காதர் இப்ராகிம் சிறப்புரையாற்றினார்



