32.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மலேசிய சைவ நற்பணிக்கழகத்தின்அக்டோபர் மாத சொற்பொழிவு

🔥 Views : 20
👁 Reading Now : 38

மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் சார்பில், தமிழ்ச் சைவ சமய சொற்பொழிவு திங்கள்தோறும் நடைபெற்று வருவதை தலைநகர்வாழ் சைவ அன்பர்கள் அறிவார்கள்.

அந்த வகையில் நிகழும் அக்டோபர் மாதத்திற்குரிய சொற்பொழிவு, எதிர்வரும் 6.10.2024 ஞாயிற்றுக் கிழமை கோலாலம்பூர், விசுமா துன் சம்பந்தன், டான்சிறி சோமா அரங்கில், காலை மணி 9:30 அளவில் நடைபெறவுள்ளது.

இம்முறை பெரிய புராண விழாவாக மலரவிருக்கும் இந்நிகழ்ச்சியில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தலைவர் ‘திருமுறைச் செம்மல்’ முனைவர் தர்மலிங்கம் நடராசன் அவர்கள் பெரிய புராணத்தில் அடியார் இணக்கம் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார். சிவநேயச் செல்வி அகல்யா தர்மலிங்கம் அவர்கள் பெரிய புராணத்தில் மக்கள் பேறு என்னும் தலைப்பில் மற்றொரு உரை நிகழ்த்துவார்.

அரிய சமய உண்மைகளையும் வாழ்வியல் கூறுகளையும் அறிவதற்கும் அவற்றைப் பின்பற்றுவதற்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்து உரைக்கவும் இந்நிகழ்ச்சி வழிகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை! சிந்தனைக்கும் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சைவ சமய ஆர்வலர்கள் தமிழர் பண்பாட்டு உடையில் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயனடைய அழைக்கப் படுகின்றனர்.

இலவயமாக நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்பர்-களுக்கு மதிய உணவும் வழங்கப்படும். கூடுதல் தெரிவலுக்கு 0123277061 அல்லது 0122340470 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் தொடர்புக்கு darmamsnk@yahoo.com.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles