
ஜாகார்த்தா அக். 21- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தோனிசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் நேற்று ஜகார்த்தாவில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார்.
குடியரசின் எட்டாவது அதிபராக பிரபோவோவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தோனிசிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சனிக்கிழமை தொடங்கி அன்வார் இங்கு பணி விஜயம் செய்து வருகிறார்.
“இன்றிரவு, எனது உண்மையான நண்பரும் சகோதரருமான பிரபோவோ சுபியான்டோவை சந்தித்தேன்”.
“நாங்கள் தனிப்பட்ட மட்டத்தில் மட்டுமல்லாமல் மாநில மட்டத்திலும் நட்பின் உணர்வுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுவோம், இது நிச்சயமாக இரு நாடுகளின் மக்களுக்கும் சிறந்த நன்மைகளைத் தரும்” என்று அவர் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்



