
MCO நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை செய்ய பணிக்கும் முதலாளிகள் அல்லது நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் எச்சரித்தார்
அதே போல் தொழிலாளர்களை வேலையிடத்திலேயே தங்க நிர்பந்திக்கும் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவை மீறி அலுவலகம் வர கட்டாயப்படுத்தும் முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
