
🔊To listen to this news in Tamil, Please select the text.
கிளாந்தானில் வெள்ளம் மோசமடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் உள்ள 20 கூட்டரசு சாலைகள் மூடப்பட்டது
கடந்த புதன்கிழமை தொடங்கி கிளாந்தானில் மிக கனமழை காரணமாக வெள்ளம் மோசமடைந்தது
பாசீர் மாஸ், கோத்தா பாரு, தும்பாட், தானா மெரா, பாசீர் பூத்தே, பாச்சோக் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளும் மூடப்பட்டன.
20 சாலைகளில் 12 சாலை வழிகள் முழுவதுமாக மூடப்பட்டது. அதில் 8 சாலை வழிகளும் சிறிய ரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கிளாந்தான் மாநில பொதுப்பணி துறை இலாகா நிக் சோ யாக்கோப் கூறினார்
