
தனது தந்தை, முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவியின் ஆட்சிக் காலத்தில் அரசாங்கப் பணத்தைத் தாம் கொள்ளையடித்தாகத் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் தெரிவித்த கூற்றை கமாலுடின் அப்துல்லா மறுத்துள்ளார்.
மகாதீர் முஹம்மத்தின் மகனிடம் தனது தந்தையின் அரசியல் நிலையைப் பயன்படுத்தி பணத்தைத் திருடுவது அல்லது தன்னை வளப்படுத்துவதுதான் தனது முறை என்று தாம்
கூறவில்லை என்று கமாலுடின் அப்துல்லா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை கமாலுடின் கடுமையாக மறுத்தார்.
மகாதீர் தற்போது பல விஷயங்கள் மற்றும் தனிநபர்கள் மீது மிகவும் ஏமாற்றமடைந்து கோபமாக இருக்கிறார்.
அவரது நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வதும் அவரது வாழ்க்கையின் முடிவில், அவர் தனக்குள்ளேயே அமைதியைக் காண்பார் என்று நம்புவதும் ஆகும் என்று கமாலுடின் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தார்.
