
கோலாலம்பூர் ஜன 26-
மலேசியத் தமிழ் கலைஞர்கள் இயக்கத்தின் கட்டட நிதிக்காக அதிர்ஷ்ட குழுக்கு பரிசுகள் நேற்று குலுக்கப்பட்டது.
மலேசிய தமிழ் கலைஞர்கள் இயக்கத்தின் தலைவர் கே.பழனிசாமி தலைமையில் சிலாங்கூர் ரோயல் கிளப்பில் அதிர்ஷ்ட குழுக்கு நிகழ்வு நடைபெற்றது.
நேற்று முதல் கட்டமாக மூன்று பரிகளுக்கான குலுக்கல் இடம் பெற்றது.

செராஸ் வட்டாரத்தில் பிரபலமான இளம் தொழில் அதிபர் டத்தோ டாக்டர் மகேந்திரன், கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை மற்றும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தமிழ் கலைஞர்கள் இயக்கத்தின் கட்டட நிதிக்காக அதிர்ஷ்ட குழுக்கு பரிசுகளை வாங்கி ஆதரவு வழங்கிய அனைவருக்கும் பழனிசாமி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
