27.9 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

கால நிலை மாற்றம் உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது

காலநிலை மாற்றம் மலேசியாவின் உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மாறிவரும் வானிலையும் உலகளாவிய வெப்பநிலை உயர்வும் விவசாயத் துறையை பாதிப்பதால், உள்நாட்டு உணவு உற்பத்தி அதிகரிக்கும் அபாயங்களை எதிர்கொள்ளும் நிலையில், மலேசியாவும் இப்பகுதியும் காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன என்று விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது சாபு வலியுறுத்தினார். மேலும், உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள பிராந்திய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

கம்போடிய அரிசி ஏற்றுமதி பற்றியும் மலேசியாவின் அரிசி இறக்குமதி பற்றியும் அவர் பேசுகையில், அங்கிருந்து மலேசியா 50,000 மெட்ரிக் டன் நறுமண அரிசியை இறக்குமதி செய்கிறது என்றும், இது நாட்டின் மொத்த அரிசி இறக்குமதியில் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார். மேலும், இந்தியா அரிசி ஏற்றுமதியை நிறுத்தியதால், மலேசியாவில் அரிசி விநியோகத்தில் சிக்கல்களை சந்தித்தோம் என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles