29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கு: நெருக்கடியால் சிஐடி விசாரணை திரும்பப் பெறவில்லை- கர்நாடகா மந்தரி

🔥 Views : 5
👁 Reading Now : 46

தங்கம் கடத்தில் வழக்கில் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட கர்நாடகா, பின்னர் அதை திரும்பப் பெற்றது. திரும்ப பெற எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில நடிகை ரன்யா ராவ் துபாயில் இருநது கேம்பேகவுடா சர்வதேச நிலையத்திற்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது அவரிடம் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை டிஜபி ரேங்கில் உள்ள உயர் அதிகாரி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு நெறிமுறைகளை தவறுதலாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ரன்யா ராவ் கைது செய்யப்பட்டதும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக சிஐடி விசாரணை நடத்த அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா உத்தரவிட்டார்.

இதற்கிடையே ரன்யா ராவின் தந்தை கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதில் பங்கு உள்ளதா? என விசாரணை நடத்த கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தாவை நியமித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles