
மஇகா ஏற்பட்டில் நோன்பு துறப்பு மஇகா நேதாஜி பட்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு வருகையாக மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் டத்தோ ஸ்ரீ சரவணன் மற்றும் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். டத்தோ ஸ்ரீ சரவணன் பேசும்போது இந்திய முஸ்லிம்களுடைய பங்கு அளப்பரியது.

தமிழை வளர்க்கவும் நம் கட்டிடத்திற்கு பெரும் உதவியாகவும் இருந்துள்ளனர்துண் சாமிவேலு இருந்த காலத்தில் இருந்து இந்திய முஸ்லிம் நண்பர்கள் இன்று வரை நமக்கு உறவு பலமாக இருந்து வருகின்றனர். டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் அவர்களுக்கு என்றும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். வர்த்தகத் துறையிலும் இன்று நம்மோடு இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோன்பு துறப்பு விழா சிறப்பாக நடைபெருகிறது. அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

