
பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனக் கூறப்படும் பேஸ்புக் பதிவு தொடர்பாக சர்ச்சை மத போதகர் ஜம்ரி வினோத் கைது செய்யப்பட்டுள்ளார். தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலை இடமாற்றம் செய்யும் விவகாரம் குறித்து அவர் செய்த பதிவு விவாதத்திற்குரியதாக இருந்தது என காவல்துறைத் தலைவர் ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார். ஜம்ரி தற்போது பதாங் பெசார் மாவட்ட காவல் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாளை கங்கார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்படுவார்.
