29 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பெருநாள் வியாபாரத்தில் கட்டுக்குள் விலை – அன்வாரின் உச்சவரம்பு திட்டம் வெற்றியா?

🔴 உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்குமா?
நோன்புப் பெருநாளின் போது உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், பற்றாக்குறையை தடுப்பதற்கும் மடானி அரசாங்கம் “உச்சவரம்பு விலைத் திட்டம்” அமல்படுத்தியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். இதன் விளைவாக, முட்டைகள் உள்ளிட்ட சில முக்கிய உணவுப் பொருட்களின் விலை குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

🔴 அரசின் திட்டம் உண்மையில் பயனளிக்கிறதா?
அவரது கூற்றுப்படி, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும், வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட நடவடிக்கைகள் சில உணவுப் பொருட்களை மலிவாக மாற்றியுள்ளன. இதனால், பெருநாளுக்காக பொருட்களை வாங்கும் பொதுமக்களுக்கு நிவாரணமாக இருக்கும்.

இந்நிகழ்வில் மைடின் ஹோல்டிங்ஸ் நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் உட்பட முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்களின் நலன் கருதி செயல்படும் “சிங்கா மடானி” திட்டம், அரசின் பல முயற்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் என்பதும் அன்வாரின் கருத்தாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles