
புதிதாக பிறந்த இரு குழந்தைகளை தாய்மார்களிடம் மாற்றிக் கொடுத்த
தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க குடும்பத்தார்
முடிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஷா ஆலாமிலுள்ள தனியார்
மருத்துமனையில் பிறந்த குழந்தை எங்களுடையது அல்ல என்ற
சந்தேகத்தின் பேரில்,ஒரு தொழில் முனைவரான 23 வயது சித்தி சுரியானி
வாஹிடின் மருத்துவமனையுடன் தொடர்புக் கொண்டு
தெரிவித்துள்ளார்.
இவரின் குழந்தை மற்றவரிடம் கை மாறிச் சென்று விட்டதை உணர்ந்த மருத்துவமனை
நிர்வாகம் பிள்ளைகளை தாய்மார்களிடம் மீண்டும் திரும்ப மாற்றிக்
கொடுத்ததுடன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.
