
செய்தி / படங்கள் : கோபி
தமிழ் நாடு காரைக்குடி அருணா நகரில் உள்ள பி.கே என். மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிருபர் முருகன் அவர்களின் சிகிச்சை நிதிக்கு மகிமா தேசிய தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் அவர்கள் இன்று நிதி வழங்கி பேருதவி புரிந்தார்.
தக்க நேரத்தில் நிதியுதவி செய்த டத்தோ கண்ணா சிவகுமார் அவர்களுக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
