
நாட்டு மக்கள் இன்னும் நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து மீள வில்லை.ஆகவே இப்போது பொதுத் தேர்தல் நடத்தும்படி அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டாம் என்று அம்னோ தேர்தல் குழு இயக்குனர் டத்தோஸ்ரீ தாஜுதீன் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார். பொதுத் தேர்தல் நடத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. அனைத்து கட்சிகளும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த போராட வேண்டும் என்று பாமிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் நோய்தொற்று படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். அனைத்து கட்சிகளும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
