
அவசரகாலத்தில், அமைச்சரவைக் “கோல் கம்பத்தை நகர்த்தும்” பணியைச் செய்கிறது எனும் குற்றச்சாட்டை, நாடாளுமன்றம் மற்றும் சட்டத்துறை அமைச்சர், தக்கியுடின் ஹாசன் மறுத்தார்.
அதற்குப் பதிலாக, நடுவர்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவும் பொருட்டு, அமைச்சரவை விதிகளைத் திருத்துகிறது என்று அவர் கூறினார்.
யாரும் கோல் கம்பத்தை நகர்த்தவில்லை, நடுவர் சரியான தீர்ப்பை வழங்க உதவும் வகையில் விளையாட்டின் விதிகளைச் சரிசெய்கிறோம் அவ்வளவுதான்.
ஓர் இலக்கை அடைவது என்பது கோல் கம்பங்களை மாற்றுவதாக அர்த்தப்படாது என்று அவர் கூறினார்.
