28.5 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

அட்சயப் பாத்திரம் திட்டம் 2.0 ஆரம்பம்! கணபதிராவ் அறிவிப்பு

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் அட்சயப் பாத்திரம் திட்டம் 2.0 மீண்டும் தொடங்கப் பட்டிருப்பதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அட்சயபாத்திரம் திட்டத்தின் கீழ் 100 ஆலயங்கள் மூலம் 14,000 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு 80 ஆலயங்கள் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் மானியங்கள் பெறும் ஆலயங்கள் இதுபோன்ற நல்ல காரியங்களுக்கு உதவும்படி அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles