27.9 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

மூடி கிடக்கும் பூக்கடைகள்!எப்போது திறக்கப்படும்

நாட்டில் பூக்கடைகள் இன்னமும் திறக்கப்படாமல் மூடிக் கிடக்கின்றன. தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்காக பூக்கடை வியாபாரிகள் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் பூக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
இருப்பினும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பூக்கடை வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.
காலை எத்தனை மணி முதல் மாலை எத்தனை மணி வரை பூக்கடைகள் திறக்கபடலாம் என்ற அறிவிப்புக்காக இவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles