
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி 165,000 பேருக்கு தடுப்பூசி போட சிலாங்கூர் மாநில அரசு மூடிவு செய்துள்ளது.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் தடுப்பூசிகளை சொந்தமாக வாங்கும் திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை விரைவுபடுத்த முடியும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார். வரும் ஆகஸ்டு மாதம் தொடங்கி தினசரி 165,000 பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைய முடியும் என்று அவர் கூறினார்.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநில மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.



