29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி அவசியம்!

🔥 Views : 24
👁 Reading Now : 50

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு இன்னும் பதிந்து கொள்ளாத மூத்த குடிமக்களை அடையாளம் காணும் முயற்சி தீவிரப்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் சிலாங்கூர் நிலையிலான இரண்டாம் கட்ட நடவடிக்கையில் பதிவு செய்த முத்த குடிமக்களில் 88 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.
மூத்த குடிமக்கள் மட்டுமின்றி நோய்களில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளும் இந்த தடுப்பூசித் திட்டத்தில் பதிந்து கொள்வதை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறோம் என்று அவர் கூறினார்.
தொழில்சாலை ஊழியர்களுக்கும் இந்த தடுப்பூசி இயக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles