
கோவிட்19 நோய்த்தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் தற்போது மருத்துவமனைகளில் கட்டில்கள் காலியாக இல்லை.
நோய்த்தொற்று தவிர்த்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் இதர நோயாளிகள் கட்டிலுக்காக காத்திருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் கட்டில்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.
குறிப்பாக கிள்ளான் வட்டாரத்தில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 567 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக அவர் சொன்னார்.
