
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் தற்காலிக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் படுக்கைகளுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை நிவர்த்தி செய்ய மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தற்போது இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
செர்டாங் மேப்ஸ் நோய்தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்தும் இடம் காலியாக இருக்கும்போது இவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
தற்போது கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
