33.1 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

யோக நிலையில் காட்சி தரும் ஹயக்ரீவர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது செட்டிபுண்ணியம் என்ற ஊர். இங்கு யோக ஹயக்ரீவப் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் அருளும் ஹயக்ரீவர், நான்கு திருக்கரங்களுடன், சங்கு மற்றும் சக்கரத்தை கையில் ஏந்தியபடி யோக நிலையில் வீற்றிருக்கிறார்.

வெற்றிக்காக போராடுபவர்கள், குறிப்பாக மாணவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தங்களின் படிப்பு தொடர்பான பொருட்களை மூலவரின் காலடியில் வைத்து வாங்கிச் செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வணங்குகிறார்கள்.

இத்தலத்தில் இருக்கும் ராமன் சிலையில், அவரது கணுக்காலில் ஒரு ரட்சை (கயிறு) கட்டப்பட்டுள்ளது. தாடகை வதத்தின்போது, விசுவாமித்திர முனிவரால், இந்த கயிறு கட்டிவிடப்பட்டதாக தல புராணம் சொல்கிறது. செங்கல்பட்டில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles