
நாட்டில் இதுவரை 10 விழுக்காடு மக்களுக்கு அதாவது 31 லட்சத்து 90 ஆயிரத்து 789 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக தேசிய தடுப்பூசி பணி குழுத்தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தேசிய மீட்சி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது நாளொன்றுக்கு மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்.


