
நாட்டில் நோய்த்தொற்றுகள் மிகவும் மோசமடைந்து இருக்கிறது.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான தேசிய பாதுகாப்பு மன்றமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டார்.
நோய்தொற்று மோசம் அடைந்ததற்கு தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அறிவியல் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று பேராக் மாநில பாஸ் தலைவர் ரஸ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்த மூன்று அம்னோ அமைச்சர்கள் தங்களது பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு மன்றமே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.
ஆகவே நாட்டில் மிக மோசமான நோய் தொற்றுக்கு தேசிய பாதுகாப்பு மன்றம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.



