
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்ள அம்னோ எடுத்த முடிவை 50 உச்சமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததாக அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் தெரிவித்தார்
56 உச்சமன்ற உறுப்பினர்களில் 50 பேர் இதற்கு கையெழுத்திட்டு ஆதரவு வழங்கினார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்வதில் பெரும்பாலான அம்னோ உச்சமன்றக் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.
இந்த முடிவை ஒத்தி வைக்கலாம் அல்லது நாடாளுமன்றம் கூடும்போது இதை மேற்கொள்ளலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.
இருப்பினும் 50 உச்ச மன்ற உறுப்பினர்கள் இதற்கு முழு ஆதரவு தெரிவித்தனர் என்றார் அவர்.


