
சிலாங்கூர் மாநிலத்தில் ஸ்ரீ மூடா வட்டாரத்தில் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பாக விளங்கும் பிரகாஷ் கிளப் மீண்டும் தீவிர பயிற்சிக்கு திரும்பியுள்ளது. மிக விரைவில் தொடங்கும் வெட்ரன் கிணணப் போட்டியில் பங்கேற்கும் வகையில் இதன் ஆட்டக்காரர்கள் தீவிர பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். பிரகாஷ் கால்பந்து கிளப் வெற்றி நடை போட டத்தோ சிவா பெரும் உதவி புரிந்து வருகிறார். கடந்த காலங்களில் பல அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்று பல கிண்ணங்களை வென்று இருக்கும் பிரகாஷ் கிளப் மீண்டும் வெற்றிப் பாதைக்கு தெரிவிப்பதாக அதன் உரிமையாளர் பிரகாஷ் தெரிவித்தார்.



