
நாட்டில் இதுவரை 2 கோடியே 14 ஆயிரத்து 545 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்தார்.
இதில் ஒரு கோடியே 35 லட்சம் பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் 65 லட்சத்து 14 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
இதுவரை இரண்டு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது பெருமை அளிப்பதாக அவ ர் சொன்னார்
