
Boustead Holdings Berhad நிறுவனத்தின் ஜிஎல்சி எனப்படும் தலைவர் பதவியிலிருந்து நாளை விலகப் போவதாக அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட்
நோர்டின் அறிவித்துள்ளார்.
நாளை நிச்சயமாக பதவி விலக்குவேன்.அதற்கான பதவி விலகல் கடிதத்தையும் ஒப்படைப்பேன் என்றார். பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மற்றும் தேசியக் கூட்டணி அரசாங்கத்துக்கான ஆதரவை
அம்னோ மீட்டுக் கொண்டிருப்பது இவரின் பதவி விலகளுக்கு காரணாமாக
இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர்
டத்தோஸ்ரீ சம்சூல் அனுவார் நஸ்ரா நேற்று தமது அமைச்சர் பதவியை
ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
