
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் இன்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆண்கள் 57 கிலோ பிரி ஸ்டைல் இறுதிப்போட்டியில் ரவிக்குமார் ரஷ்யாவைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் என்பவருடன் மோதினார்.
இதில் ரஷ்ய வீரர 7-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ரவிக்குமாருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
