
சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 33 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு முதல் தடுப்பூசி போட பட்டிருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
மேலும் சிலாங்கூரில் 14 லட்சத்து 30 ஆயிரம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.
தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான தரவுகளை தனது முகநூலில் பகிர்ந்து கொண்ட அவர், பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் 47 லட்சத்து 80 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளும் சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் வாயிலாக 217,995 தடுப்பூசிகளும் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
