
கெஅடிலான் கட்சியை சேர்ந்த ஐந்து எம்பிக்களை வாங்க தீவிர முயற்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கெஅடிலான் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நசுத்தியோன் இன்று அம்பலப்படுத்தினார்.
செத்தியாவங்சா, பாலேக் பூலாவ், அலோர் ஸ்டார், கோலா கெடா, உலு சிலாங்கூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்க முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அமைச்சர் பதவி வழங்குவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இதற்கு முன்னர் தங்களை வாங்குவதற்கு பேரன் பேசப்பட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் உட்பட மூன்று ஜசெக எம்பிக்கள் நேற்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இப்போது கெஅடிலான் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை வாங்குவதற்கு தீவிர முயற்சி அரங்கேறி கொண்டிருப்பதாக டத்தோஸ்ரீ நசுத்தியோன் குறிப்பிட்டார்.
