சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட மாட் ரெம்பிட் கும்பலை விரட்டிச் சென்றபோது இரு போலீஸ்காரர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று அதிகாலை 1,30 மணிக்கு புத்ரா ஜெயா சில்க் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. தலையிலும் முகத்திலும் பலத்த காயங்களுக்கு ஆளான இரு போலீஸ்காரர்களும் அது இடத்தில் உயிரிழந்ததாக காஜாங் மாவட்ட மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சைட் தெரிவித்தார்.