
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டதில் உறுதியாக இருப்பதாக பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட் நாடாளுமன்ற உறுப்பினர் அமாட் நஸ்லான் இட்ரிஸ் என்று தெரிவித்தார்.
பிரதமருக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டேன். இதை வாபஸ் பெறவில்லை.
கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பிரதமர் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் நான் என்னுடைய ஆதரவை அதிகாரப்பூர்வமாக மீட்டுக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
