
தேசிய முன்னணியில் மசீச இன்னமும் இருக்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.
அம்னோ வழங்கிவந்த பங்களிப்பை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
அம்னோ மற்றும் மஇகா போன்ற உறுப்புக் கட்சிகளை எப்போதும் மசீச மறந்துவிடவில்லை.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பது என்று இவ்வாண்டு மார்ச் மாதம் தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அந்த முடிவுக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
மேலும் அம்னோவின் அரசியல் நெருக்கடியில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
