
தோல்வி கண்ட அரசாங்கத்தை தற்காப்பதற்கு இது நேரமில்லை.
நாட்டில் இதுவரை நோய் த்தொற்றால் 11,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டிருக்கிறது.
அம்னோவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வி கண்ட அரசாங்கத்தை தொடர்ந்து தற்காத்துக் கொள்வதற்கு இது நேரமில்லை.
ஆகவே அவர்கள் உண்மையான அம்னோவின் போராட்டத்திற்ககு திரும்ப வேண்டும் என்று அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டார்.
நம் மக்களோடு தோள்கொடுத்து நிக்க வேண்டும். மக்களுக்காக போராடும் உறுப்பினர்களாக நாம் விளங்க வேண்டும்.
தோல்வி கண்ட அரசாங்கத்தை தொடர்ந்து தற்காத்துக் கொள்ள வேண்டாம்.
இன்னமும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரித்து கொண்டிருக்கும் அம்னோ எம்பிக்கள் உடனடியாக கட்சியின் உண்மையான போராட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


