
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தற்போது கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்.
அம்னோ எம்பிக்கள் பிரதமருக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்டதால் இப்போது டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பெரும்பான்மையை இழந்து விட்டதால் நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்யலாம்.
பொதுத் தேர்தலை நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் பரிந்துரையை செய்யலாம்.
இந்த பரிந்துரையை மாட்சிமை தங்கிய மாமன்னர் நிராகரிப்பதே நல்லது என்று
முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ தோமி தோமஸ் குறிப்பிட்டார்.
நோய்த்தொற்றினால் இதுவரை 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வேளையில் பொதுத் தேர்தல் நடத்துவது பொறுப்பற்ற செயல் என்று அவர் தெரிவித்தார்.



