
3 கோடி வெள்ளி டூரியான் வெகுமதியை பெற்றுக்கொண்டு அணிதாவ போகிறோம் என்று எங்களுக்கு எதிராக வதந்திகளை பரப்பிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசா மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் போலீஸாரை கேட்டுக்கொண்டுள்ளார்
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கும் அவர்கள் இது தொடர்பில் விசாரணை நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா வுடன் இணைந்து நாங்கள் மூன்று பேரும் 3 கோடியே வெள்ளி வெகுமதி பெற்றுக்கொண்டு அணிதாவப் போகிறோம் என்று பொய்யான செய்திகளை பரப்பியுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
