
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததுள்ளது.
இனி எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரின் அணியைச் சேர்ந்தவர்கள் தற்போது பெரும் கவலையில் இருக்கிறார்கள்.
பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் பதவி விலகுவதை தவிர டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வேறுவழியில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் அமைச்சரின் அதிகாரிகள் தங்களது அலுவலகத்தை காலி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
