
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்போது 105 எம்பிக்கள் ஆதரவை பெற்றிருக்கிறார்.
மேலும் ஆறு எம்பிக்களின் ஆதரவு இருக்கிறது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க அனைத்துத் தகுதிகளையும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொண்டிருக்கிறார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போதுமான எம்பிக்களின் ஆதரவை கண்டிப்பாக பெறுவார் என்று அவர் தெரிவித்தார்.
