
பிரதமர் வேட்பாளருக்கு டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்மொழியப்பட்டால் அதுபற்றி டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முடிவெடுப்பார் என்று பெர்சத்து கட்சி அறிவித்துள்ளது.
நேற்று பெர்சத்து மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் எம்பிக்கள் இடையே சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் வேட்பாளருக்கு டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்மொழியப்பட்ட அவரை ஆதரிப்பது குறித்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம் என்று பெர்சத்து துணைத் தலைவர் பைசால் அமுசு தெரிவித்தார்.
கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
