
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 111 எம்பிக்கள் ஆதரவைப் பெற்றால் அவர் பிரதமராவதற்கு வாரிசான் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ அஜிஸ் ஜஸ்மான் அறிவித்துள்ளார்.
இப்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 105 எம்பிக்கள் ஆதரவை பெற்றிருக்கிறார்.
இன்னும் கூடுதலாக ஆறு எம்பிக்கள் ஆதரவை பெற்றால் அவர் பிரதமராவதற்கு முழு ஆதரவு வழங்குவோம் என்றார் அவர்.
ஒருவேளை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 111 எம்பிக்கள் ஆதரவை பெறத் தவறினால் அந்த எண்ணிக்கையை பெறுவதில் டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால் வெற்றி பெற்றால் அவர் பிரதமராக வருவதற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
