
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை குறைகிறது.
தற்போது 50 விழுக்காடு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று
மருத்துவமனைஸ இயக்குனர் டாக்டர் சூல்கர்னையின் முகமாட் ரவி தெரிவித்தார்.
முன்பு தினசரி 400 நோயாளிகளை இந்த மருத்துவமனை பெற்றது.
ஆனால் இந்த எண்ணிக்கை 170 நோயாளிகளாகக் குறைந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் உச்சத்தில் 1,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இப்போது நோயாளிகள் எண்ணிக்கை 900க்கும் குறைவாகவே உள்ளது என்று அவர் கூறினார்.
