
இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் நால்வர் நோய் தொற்றால் மரணம் அடைந்திருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று தெரிவித்தார்.
நாட்டில் நேற்று வரை நோய்த தொற்றினால் 12,993 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள்.
இதில் 80 பேர் ஒரு தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள்.
நான்கு பேர் இரண்டு முறை தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் என்று அவர் சொன்னார்.
நாட்டில் இதுவரை 48.7 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்றார் அவர்
